தேர்தல் ஆபீஸ்லேயே தவெக வேட்பாளர் பணப்பட்டுவாடா

காங்கயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஈரோட்டை சேர்ந்த மணி, நேற்று முன்தினம் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மனு தாக்கலை முடித்துவிட்டு வெளியே வந்தபோது அங்கு அலுவலக பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கியதைப் பார்த்தார். பணியாளர்களிடம் என்ன மதிய உணவு என கேட்டார். சாதம், சாம்பார், ரசம், பொரியல் என கூறினர்.

அப்போது வேட்பாளர், மணி இனிப்பு இல்லையா என அருகில் இருந்த அவரது உதவியாளரிடம் இனிப்புக்கு பணம் கொடுக்க சொன்னார். உடனே அருகில் இருந்தவர் தான் வைத்திருந்த பணத்தில் ரூ.2500ஐ எடுத்து அலுவலக பணியாளரிடம் கொடுத்து அனைவருக்கும் இனிப்பு வாங்கி வழங்கி விடு என்றார்.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்குகிறார்களா என துணை ராணுவ படையுடன் பறக்கும் படை, கண்காணிப்பு குழு உள்ளிட்டவைகள் செயல்பட்டு வரும் நிலையில், தேர்தல் அலுவலகத்தில் வைத்தே தவெக நிர்வாகிகள் அலுவலக பணியார்களுக்கு பணம் கொடுத்தும், அவற்றை பெற்று கொண்டனர். தற்போது அந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Related Stories: