×

அதிமுகவை பாரதிய ஜனதாவிடம் அடகு வைத்தவர் எடப்பாடி: கருணாஸ் காட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருணாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய் தனியாக போட்டியிடவில்லை; தனித்து விடப்பட்டுள்ளார். விஜய் பிரசாரத்தின்போது காரின் மீது பாய்ந்தது தொண்டர்கள் அல்ல. ரசிகர்கள். ரசிகர்களின் நடவடிக்கை அப்படித்தான் இருக்கும். டிடிவி.தினகரன் அரசியலுக்கு வரும்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்றார். பின்னர் மோடி மற்றும் பாஜவுக்கு எதிராக பேசியவர், இப்போது தாமரை இலையில் படுத்து உறங்குகிறார். வாஜ்பாய் தலைமையிலிருந்த பாஜவுக்கும், தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான பாஜவுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளன.

அதிமுக கட்சியின் அடிப்படை விதிகளை எடப்பாடி பழனிசாமி பின்பற்றவில்லை. தன் மீதுள்ள ஊழலை மறைக்க, கட்சியை பாஜவிடம் அடகு வைத்துள்ளார். இந்த தேர்தலில் அதிமுக தொண்டர்களே அவருக்கு பதில் அளிப்பார்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு இரட்டை இலை வலிமை குறைந்துவிட்டது. தற்போது அது பாஜகவின் கீழ் செயல்படுகிறது. தமிழக மக்கள் இதை நிராகரித்து விட்டார்கள். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். இவ்வாறு பேசினார்.

Tags : Adamugawa ,Bharatiya Janata ,Edapadi ,Karunas Kadam ,SIVAGANGA ,KARUNAS ,DIMUKA ,SIVANGKA ,VIJAY ,DTV ,
× RELATED தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில்...