×

10 முறை தோல்வியை கண்டவரால் திமுகவை வீழ்த்த முடியாது: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

கோபி: 10 முறை தோல்வி கண்ட எடப்பாடியால் திமுகவை வீழ்த்த முடியாது என கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நம்பியூரில் தவெக தேர்தல் அலுவலகத்தை தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று (ஞாயிறு) திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான்கு பொதுதேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் என 10 முறை தோல்வியை கண்டவர் எடப்பாடி பழனிசாமி. ஒருமுறை கூட வெற்றி பெற முடியவில்லை. அவர்களால் திமுகவை வீழ்த்த முடியவில்லை. அவர்களுக்கு (என்.டி.ஏ. கூட்டணிக்கு) அளிக்கும் வாக்கு நோட்டாவிற்கு அளிக்கும் வாக்கை போல தான் இருக்கும். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Tags : DMK ,K.A. Sengottaiyan ,Gopi ,DVA ,Nambiyur ,Gopi, Erode district ,chief coordinator ,
× RELATED தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில்...