முத்துப்பேட்டை அருகே பைக் மோதி மாவட்ட நூலகர் பலி

முத்துப்பேட்டை,ஏப்.5: முத்துப்பேட்டை அருகே சிறுவர்கள் ஓட்டி வந்த பைக் மோதி ஓய்வு பெற்ற நூலகர் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா ஓதியடிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் கனகசபை (71). ஓய்வு பெற்ற மாவட்ட நூலகர். இவர் நேற்று முன்தினம் முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு பகுதியில் சாலையோரம் ஒரு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்று மளிகை, காய்கறி வாங்கி கொண்டு, கிழக்கு கடற்கரை சாலையில் கடந்து சென்றார்.

அப்போது முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் சென்ற பைக் கனகசபை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட அங்கு சிகிச்சை பலனின்றி கனகசபை உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த ஓய்வு பெற்ற நூலகர் கனகசபை உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: