மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

 

மேட்டுப்பாளையம், ஏப். 6: மேட்டுப்பாலையம் அருகே மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் பிரபாகர் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (46). விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று கல்லாறு பகுதியில் உள்ள மீசைக்காரர் தோட்டத்தில் தென்னை மட்டைகளை சேகரிக்கும் போது அதே பகுதியில் உள்ள ஆனந்தகுமார் (52), என்பவரது விவசாய நிலத்தின் மின்வேலி அருகே விழுந்த தென்னை மட்டையை எடுக்க முயன்ற போது மின்வேலியில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: