ஈரோடு, ஏப். 6: ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வாகித்காளி (38). இவர், ஈரோடு பெரியார் நகரில் கடந்த 2 ஆண்டாக செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடைக்குள் கடந்த 2ம் தேதி மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, 2 ஐபோன் மற்றும் 10 செல்போன்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் நேற்று முன்தினம் வாகித்காளி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
