வைக்கோல் லாரியில் தீ போராடி அணைப்பு

ராசிபுரம், ஏப்.5: ராசிபுரம் அருகே உள்ள ஏ‌.கே.சமுத்திரத்தில் விவசாயி அசோக் என்பவரது தோட்டத்தில், வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அப்போது, வைக்கோல் கட்டுகளில் மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து லாரியில் இருந்த 180க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளில் தீ பரவியதோடு, லாரியிலும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினர், ஒருமணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வைக்கோல் கட்டுகள் மற்றும் லாரியின் மரப்பலகைகள் மற்றும் ஒயர்கள் எரிந்து சேதமானது. விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: