நாமகிரிப்பேட்டையில் ரூ.2.30 கோடிக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, ஏப்.1: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் 2,077 மூட்டையும், உருண்டை மஞ்சள் 692 மூட்டையும், பனங்காளி 74 முட்டைகள் என மொத்தம் 2,843 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. விரலி ரக மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக ரூ.17,009க்கும், குறைந்த பட்சம் ரூ.13,725க்கும், உருண்டை மஞ்சள் அதிகப்பட்சம் ரூ.13,805க்கும், குறைந்தபட்சம் ரூ.12,282க்கும், பனங்காலி மஞ்சள் அதிகபட்சம் ரூ.33,845க்கும், குறைந்தபட்சம் ரூ.32,447 என மொத்தம் 2,843 மூட்டைகள் ரூ.2.30 கோடிக்கு விற்பனையானது.

Related Stories: