நாமக்கல், ஏப்.3: நாமக்கல்-துறையூர் ரோட்டில் உள்ள கூலிப்பட்டியில் கந்தகிரி பழனியாண்டவர் முருகன் கோயில் உள்ளது. கோயிலை சுற்றியுள்ள பாதையில் 2 மயில் வாகன கற்சிலைகள், விநாயகர் கோயில் பின்புறம் உள்ள 3 நாகர் கற்சிலைகளை மர்மநபர்கள் நேற்று முன்தினம் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். கடந்த 31ம் தேதி கூலிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் உள்ள ஊர் மாரியம்மன் கோயிலின் வெளிப்புறம் இருந்த தட்சிணாமூர்த்தி, பாலமுருகன் கற்சிலைகளையும் மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, கோயில் செயல் அலுவலர் சுந்தரராசு, நாமக்கல் போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கூலிப்பட்டி முருகன் கோயிலில் சிலைகள் உடைப்பு போலீசில் புகார்
- கூலிப்பட்டி முருகன் கோயில்
- நாமக்கல்
- கந்தகிரி பழனியாண்டவர் முருகன் கோவில்
- கூலிப்பட்டி
- நாமக்கல்-துறையூர் சாலை
- விநாயகர் கோயில்
