மல்லசமுத்திரம் அருகே சின்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா

மல்லசமுத்திரம், ஏப்.3: மல்லசமுத்திரம் சின்னமாரியம்மன் கோயில் தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற்றினர். மல்லசமுத்திரம் சந்தைபேட்டை அருகிலுள்ள சின்னமாரியம்மன் கோயிலில் கடந்த 19ம் தேதி இரவு 8 மணிக்கு, கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பூவோடு எடுக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு, மாதேஸ்வரன் கோயிலில் இருந்து பக்தர்கள் அக்னிகரகம் எடுத்து வந்தனர். காலை 6 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து, பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு பூங்கரகம், முளைபாரி ஊர்வலம், அலகு குத்துதல் நடந்தது.

Related Stories: