தொழிற்சாலைகள், கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை

 

சென்னை, ஏப். 5: தொழிற்சாலைகள், கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொழிலாளர் ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்ற ெபாதுத்தேர்தல் வருகிற 9ம் தேதியும், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23ம் தேதியும் நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாட்களான 9 மற்றும் 23ம் தேதி அவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட தொகுதிக்கேற்ப உரிய தேர்தல் நாள் அன்று, வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் கட்டுப்பாட்டு அறை அலுவலர் மற்றும் உறுப்பினர்களான எல்.ரமேஷ்-தொலைபேசி எண் 7904646090 (தொழிலாளர் இணை ஆணையர்) மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர்கள் எல்.ஷோபனா, தொலைபேசி எண் 7299007334), பி.பழனி, 7904802429) மற்றும் எஸ்.சிவக்குமார், 9043555123) ஆகியோரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: