தஞ்சாவூர், ஏப்.3: தஞ்சையில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்பார்வையாளர்களுக்கான குலுக்கல் முறை தேர்வு செய்யும் பணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தேர்தல் கணினி மையத்தில் பதற்றமான வாக்குச்சாவடிக்கான நுண்பார்வையாளர்களுக்கான குலுக்கல் முறை தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் சட்டமன்ற தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் திவேஷ் செஹரா, கேஷ்வேந்திர குமார், அருண் குமார், சர்ஜித் கவுர் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், வாக்குப்பதிவு எதிர்வரும் 23ம்தேதி அன்று நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளன்று பதட்டமான வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட உள்ளவர்களுக்கு தொகுதிவாரியாக தேர்வு செய்திட குலுக்கல் முறையிலான தேர்வு மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தேர்தல் கணினி அறையில் நேற்று நடத்தப்பட்டது.
