நூறு சதவீதம் வாக்களிக்க கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.3: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுக்கல்லூரி மாணவிகள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் குளம் அரசு கல்லூரியில் அனைவரும் 100 சதவீதம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 100 சதவீதம் என்ற வடிவமைப்பில் மாணவிகள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன் மற்றும் தனி வட்டாட்சியர் வானதி, ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

Related Stories: