திருப்பூர், ஏப். 3: போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் முழங்கால் மூட்டு மாற்று மற்றும் மூட்டு தசைநார் அறுவை சிகிச்சை முகாம் நேற்று துவங்கியது. 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மணிகண்டன் ஆலோசனை வழங்கினார். கால்சியம், வைட்டமின் டி, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் 50 சதவீத சலுகை கட்டணத்தில் செய்யப்பட்டது.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவை படுவோருக்கு 20% சலுகை கட்டணத்திலும் செய்யப்படும். மருத்துவமனையில் அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் கட்டணமில்லா சிகிச்சைக்கு இதனை உபயோகப்படுத்தி கொள்ளலாம் என நிர்வாக இயக்குனர் டாக்டர் பழனிசாமி கூறினார்.
