வாலிபர் சடலமாக மீட்பு

ஈரோடு, ஏப். 3: கோபி அடுத்த வெல்லன்காட்டுப்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்தி (25). இவர் கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது போனிற்கு அவரது அப்பா ரமேஷ் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது.

இதனையடுத்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். இருப்பினும் கார்த்தி கிடைக்கவில்லை. இந்நிலையில், 31ம் தேதி, கோபி பொம்மநாயக்கன்பாளையம் எல்பீபி வாய்க்காலில் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, மாயமான கார்த்தி என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

Related Stories: