சீர்காழியில் நகர்ப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர குடியிருப்பு வாசிகள் எதிர்பார்ப்பு

சீர்காழி, ஏப்.3: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கற்பகம் நகர் கூட்டமைப்பு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் கற்பகம் நகர், அபிராமி நகர், வெங்கடாஜலபதி நகர், பிரிலியண்ட் நகர், அறுபடை நகர், வைத்தியநாத நகர், சந்தோஷ் நகர், கற்பக விநாயகர் நகர் மற்றும் சின்னதம்பி நகர்களில் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் இணைந்து அடிப்படை வசதி கோரியும் கற்பகம் நகர் பூங்கா – விளையாட்டுதிடல் பாதுகாப்பு கோரியும் எதிர்பார்க்கின்றனர்.

அப்போது கற்பகம் நகர் உருவாக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாவதாகவும், அதனுடைய லே அவுட்டில் பூங்கா-விளையாட்டுத்திடல் 40 அடி ரோடு, ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தில் 8 ஆண்டுகளுக்கு மேல் துணை மின் நிலையம் வருவதாக கூறியதால் மேலே குறிப்பிட்டுள்ள நகர் வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அது கைவிடப்பட்டது. நல்ல குடிநீர், பாசன வாய்க்கால்கள் தூர் வாருதல் போன்ற கோரிக்கைகள் எதிர்பார்க்கின்றனர்.

 

Related Stories: