புதுக்கோட்டை , ஏப்.2: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதனை தொடர்ந்து, புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்திற்கான கொடிகள், கட்சி துண்டுகள், பதாகைகள், தொப்பிகள், பனியன்கள், பேட்ஜ்கள், கைப்பட்டைகள், வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பிரச்சரத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
இதற்கான கடைகளில் நேற்று முதலே அரசியல் கட்சியினரின் கூட்டம் அலைமோதியது. மேலும் அரசியல் கட்சி பிரச்சார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் தற்காலிக தரை கடை போடும் வியாபாரிகளும் அதற்குரிய பிரச்சார பொருட்களை மொத்த கொள்முதல் செய்து காத்து உள்ளனர். தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பாக அதற்கான படிவத்தை தேர்தல் ஆணையத்திடம் பெற்று அவர்கள் விரும்பும் சின்னத்தில் வாக்களித்து அதனை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பார்கள்.
