×

விராலிமலை அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

விராலிமலை, ஏப் 2: விராலிமலை அருகே மொபட்டில் சென்றவர் ஈச்சர் (லோடு) வாகனம் மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இலுப்பூர் வட்டம் கட்டக்குடியைச் சேர்ந்தவர் மூக்கையா மகன் ராமசாமி(55). இவர் நேற்றுமுன்தினம் சொந்த வேலை காரணமாக தனது மொபட்டில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு அதே மொபட்டில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை கொடும்பாளூர் சத்திரம் அருகே சென்றுள்ளார்.

அப்போது அரசு ஐடிஐ அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஈச்சர் கொரியர் வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக அவரது வாகனம் மோதியுள்ளது. அதில் ராமசாமிக்கு தலை கை,கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீசார் ராமசாமியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Viralimalai ,Ramasamy ,Mookkaiah ,Kattakudi ,Illupur taluk ,
× RELATED டால்மியாபுரம் பகுதியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு