×

இடையர்நத்தம்-துளசேந்திரபுரம் ஊராட்சியில் மாலையிட்டான் வாரி குறுக்கே ரூ.1.56 கோடியில் புதிய பாலம்

மன்னார்குடி, ஏப். 2: மன்னார்குடி அடுத்த இடையர்நத்தம் – துளசேந்திரபுரம் ஊராட்சிகளை இணைக்கும் வகையில் மாலை யிட்டான் வாரியின் குறுக்கே ரூ 1.56 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு பயன் பாட்டிற்கு வந்துள்ளது. 40 ஆண்டு கால கனவு திமுக ஆட்சியில் நிறைவேறிய தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடையர்நத்தம் – துளசேந்திரபுரம் ஊராட்சிகளை இணைக்கும் வகையில் மாலையிட்டான் வாரி குறுக்கே கான்கிரீட் பாலம் ஒன்றை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் கடந்த 40 வ்ருடங் களாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த பத்து ஆண்டுகளில் பலமுறை சட்டமன்றத்தில் தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா வலியுறுத் தியும் அன் றைய ஆட்சியாளர்களின் பாராமுகம் காரணமாக புதிய பாலம் என்பது மக்களின் கனவாகவே மாறிப் போனது.

இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதல்வராக மூக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எம்எல்ஏ டிஆர்பி ராஜா எடுத்த தொடர் முயற்சி காரணமாக மாலையிட்டான் வாரி குறுக் கே ரூபாய் 1. 56 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பணிகள் துவக்கப் பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

 

 

Tags : Malaiytan Vari ,Idayarnatham-Thulasendrapuram ,Mannargudi ,DMK… ,
× RELATED டால்மியாபுரம் பகுதியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு