- திருச்சி
- Thiruverumpur
- கிழக்கு
- தமிழ்நாடு வர்த்தகர்கள் சங்கம்
- மாநில பொதுச் செயலாளர்
- கோவிந்தராஜுலு
- திமுக
- திருச்சி (தெற்கு)
- அன்பில் மகேஷ்...
திருச்சி, ஏப்.2:திருபெறும்பூர் மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலுவை நேரில் சந்தித்து திமுகவுக்கு ஆதரவளிக்க கோரிக்கை விடுத்தனர். திருச்சி (தெற்கு) மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் தில்லை நகரிலுள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு நேரில் சந்தித்தனர்.
அப்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு அளித்து திமுகவை வெற்றி பெறச்செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின்போது வணிகர்களின் கோரிக்கைகள் மற்றும் தொகுதி மேம்பாடு குறித்தும் கலந்துரையாடினர். இந்நிகழ்வின் போது கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகி ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.
