லால்குடி, ஏப். 2: லால்குடி அருகே டால்மியாபுரம் பகுதியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கோடை காலத்தில் பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர், நீர் மோர், பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
முன்னதாக டால்மியா சிமெண்ட் ஆலையின் செயல் இயக்குனர் விநாயகமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 6 இடங்களில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர்மோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
