வேளாண்மை துறை சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க துண்டு பிரசுரம் விநியோகம்

உத்திரமேரூர்: வேளாண்மை துறை சார்பில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி உத்திரமேரூர் பஜார் வீதியில் நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். இதில், வேளாண்மை துறை ஊழியர்கள் கலந்துகொண்டு, உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து வாக்காளர்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டு பிரசுரத்தில் 100 சதவீதம் வாக்களிக்கவேண்டும், பணம் பெறாமல் நேர்மையாக வாக்களிக்கவேண்டும், ஓட்டளிப்பது வாக்காளர்களின் கடமை, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப் பட்டப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், வேளாண் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: