சமயபுரம் கோயில் நுழைவு மண்டப மேற்கூரை இடிந்து பெண் பக்தர் சாவு

சமயபுரம்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டத்திற்காக ஞாயிறுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறும். அந்த வகையில் நேற்று 4வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதற்காக உள்ளூர், வெளி மாவட்ட பக்தர்கள் நேற்றுமுன்தினம் இரவே கோயிலுக்கு வந்து பக்தர்கள் நுழைவாயில் மண்டபத்தில் தூங்கி கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் நுழைவு மண்டபத்தின் கான்கிரீட் மேற்கூரை சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் திருவையாறை சேர்ந்த நதியா (32) உயிரிழந்தார். இருவரும் காயமடைந்தனர்.

Related Stories: