உயர்கோபுர மின்விளக்கை சீரைமைக்க வலியுறுத்தல்

விருதுநகர், மார்ச் 25: விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட அஹமது நகரில் 9 தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அஹமது நகரில் நூலகம் அருகே இருள் சூழ்ந்த பகுதி என்பதால் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து உயர் கோபுர மின் விளக்கு அங்கு அமைக்கப்பட்டது. பாவாலி சாலையும், அஹமது நகர் சாலையும் இணையும் இடத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டதால் இரவு நேரத்தில் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இருந்தது.

இதனால், அஹமது நகரில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் அச்சமின்றி அவ்வழியே சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே சென்று வர பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர்.

மேலும், அப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம், பழுதாகியுள்ள உயர் கோபுர மின் விளக்கினை உடனடியாக சீர் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: