தேர்தல் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்

ஈரோடு,மார்ச்25: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் ஈரோடு மாவட்ட கூட்டுறவுச் சங்க அலுவலக வளாகத்தில், பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்பி பாயிண்ட் வசதி ஏற்படுத்தபட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, ஈரோடு கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் இரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: