தாராபுரம் அருகே ரூ.2 லட்சம் சிக்கியது

தாராபுரம், மார்ச் 25: தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமலைபாளையம் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தபோது அதில் திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (52) என்பவரிடம் ரூ.2 லட்சம் இருந்தது தெரியவந்தது. மணிகண்டன் திருமலை பாளையத்தில் உள்ள ஒரு நபருக்கு கடன் கொடுப்பதற்காக எடுத்து சென்றதாகவும், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

 

Related Stories: