வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற லோடு வேன் பறிமுதல்

ஏழாயிரம்பண்ணை, மார்ச் 25: வெம்பக்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி பட்டாசுகளை ஏற்றிச் என்ற 2 பேரை போலீசர் கைது செய்தனர். மேலும், லோடு வேனையும் பறிமுதல் செய்தனர். வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் வெம்பக்கோட்டை அருகே தெற்கு ஆனைக்கூட்டம் சாலையில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதி இல்லாமல் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெடிகள் தயாரித்து கொண்டு வந்தது தெரிய வந்தது. பின்னர் வாகனத்தில் இருந்த வெடிபொருட்கள் மற்றும் லோடு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் பட்டாசு ஏற்றிச்சென்ற சிவகாசி அருகே சுப்ரமணியபுரம் காலணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(24), மாரிமுத்து(29) ஆகிய இருவரையும்  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: