×

எரிவாயு தட்டுப்பாடு கேரளாவில் நூற்றுக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டன

திருவனந்தபுரம்: வர்த்தக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கேரளாவில் நூற்றுக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டன. ஈரான் போரைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. வீடுகளுக்கு சிலிண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பள்ளி, கல்லூரி விடுதிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கும் விடுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில ஓட்டல்களில் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Iran war ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடி பேச்சு...