- அமெரிக்கா
- மத்திய அமைச்சர்
- பியுஷ் கோயல்
- புது தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய
- இந்தியா
- ஐக்கிய மாநிலங்கள்
- மோடி
- ஜனாதிபதி
- டிரம்ப்
புதுடெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பரவி வரும் தவறான தகவல்களுக்கு ஒன்றிய அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோரால் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான (பிடிஏ) கட்டமைப்பு முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜவுளி, தோல் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட இந்திய பொருட்களுக்கு 18 சதவீதம் பரஸ்பர வரிச்லுகை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அதேபோல், அமெரிக்காவின் எரிசக்தி, விமானம் மற்றும் தொழில்நுட்பத் தயாரிப்புகளை அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டிருந்தது. சில அமெரிக்க இறக்குமதி வரி தொடர்பான அந்நாட்டு நீதிமன்ற தீர்ப்பால், ஒப்பந்த விதிகளில் சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததால் சட்டப்பூர்வ கையெழுத்திடும் பணி தற்காலிகமாக தள்ளிப்போனது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற என்எக்ஸ்டி உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், ‘அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் குப்பையில் வீச வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை. இந்தியாவின் நலன்கள், குறிப்பாக விவசாயத் துறை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட பொருட்கள், பால் மற்றும் கோழிப்பண்ணை பொருட்கள், அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சோயா போன்ற உணர்திறன் வாய்ந்த பொருட்கள் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் வெற்றி வாய்ப்புகளை வழங்கும் நீண்டகால திட்டம் ஆகும். இதன் மூலம் அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்பங்களை இந்தியா பெற முடியும். இது உலகளாவிய டேட்டா சென்டர் மையமாக இந்தியா உருவெடுக்க உறுதுணையாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
