×

சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது ஆரணி அருேக பரபரப்பு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி

ஆரணி, மார்ச் 10: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆரணி அடுத்த படவேடு அருகே உள்ள ஜடகொண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் வினோத்(26), நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுனர். இருவரும் உறவினர் என்பதால், வினோத் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இதனால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் வினோத், சிறுமியை திருமணம் செய்து வைக்கும்படி பெண் கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தாய், வினோத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாலும், சிறுமி படித்து வருவதாலும் பெண் தரமறுத்து விட்டார். இதற்கிடையில் வினோத், திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பலமுறை தனிமையில் இருந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்றுவலி, காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய், சிறுமியை வேலூர் பழைய அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அனுமதித்துள்ளார். அங்கு மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Arani Aruega ,Arani ,Tiruvannamalai district ,
× RELATED சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை...