×

விவசாயிகளுக்கு வேளாண் திட்ட விழிப்புணர்வு ஜமுனாமரத்தூரில்

சேத்துப்பட்டு, மார்ச் 4: ஜவ்வாதுமலை அடுத்த ஜமுனாமரத்தூரில் விவசாயிகளுக்கு வேளான் திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஜவ்வாதுமலை அடுத்த ஜம்னாமரத்தூரில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. உதவி வேளாண்மை இயக்குநர் பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார ஆலோசனைக்குழு தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார். இதில் 2025- 26ம் ஆண்டிற்கான 2வது தவணை செயல் இலக்குகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மண் வளம் மேம்பாட்டில் பசுந்தாள் உரப்பயிர்களின் பங்கு, உயிர் உரங்களின் பயன்பாடு, பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி, அங்கக மற்றும் இயற்கை வேளாண்மை முறைகள், மலைவாழ் உழவர் முன்னேற்றத்திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வேளாண் வணிகத்தில் தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல், உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் சங்கர், காய்கறி விதைகள், பழச்செடிகள், சொட்டு நீர்ப்பாசனம் பயன்பாடு, மாடித்தோட்ட மேலாண்மை முறைகள் குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் விளக்கினர். முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளர் விஷ்ணு நன்றி கூறினார். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Jamunamarathur ,Chettupattu ,Jawadumalai ,Regional Farmers' Advisory Committee ,Adma ,Agriculture Department ,
× RELATED செய்யாறில் ரூ.13.70 லட்சம் மதிப்புள்ள குட்கா அழிப்பு