×

2 காஸ் சிலிண்டர்கள் திருட்டு அரசு ெதாடக்கப்பள்ளியில்

செய்யாறு, மார்ச் 4: அரசு தொடக்கப்பள்ளியில் 2 காஸ் சிலிண்டர்களை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ெசய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சோழவரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள சத்துணவுக்கூடத்தில் அமைப்பாளராக மதி என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 28ம் தேதி சத்துணவை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு சமையல் அறையை பூட்டிவிட்டு மதி சென்றார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றபோது, சமையல் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மதி, உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த 2 காஸ் சிலிண்டர்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து மதி, தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் வழக்குப்பதிவு செய்து, பள்ளி சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டர்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

Tags : Cheyyar ,Adi Dravidar ,Cholavaram ,Vembakkam taluka ,
× RELATED செய்யாறில் ரூ.13.70 லட்சம் மதிப்புள்ள குட்கா அழிப்பு