காந்தியை கொன்ற கூட்டம் : ஹிட்லருக்கு ஒப்பான மோடி: முத்தரசன் போட்டு தாக்கு

சத்தியமங்கலம்: காந்தியை கொன்ற கூட்டத்தோடு எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார். அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஹிட்லருக்கு ஒப்பான மோடியோட முதல்வர் போராடி வருகிறார். அதற்காக நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என்று சத்தியமங்கலத்தில் முத்தரசன் பேசினார்.ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜி ராம்ஜி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலத்தில் நேற்று மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு விரோதமாக சட்டங்களை கொண்டு வரும் மோடி அரசுக்கு எடப்பாடி பழனிசாமி துணை போகிறார்.

அமித்ஷா போடுகிற உத்தரவை நிறைவேற்றும் அடிமை கட்சியாக அதிமுக மாறிவிட்டது. மகாத்மா காந்தியை கொன்ற கூட்டம் தான் தற்போது அதிகாரத்தில் உள்ளது. அன்று உயிரோடு கொன்றார்கள். இனி அவரது பெயர் இருக்கக்கூடாது என திட்டத்திலிருந்து அவரது பெயரை நீக்கி இருக்கிறார்கள். அவர்களோடு யார் சேர்கிறார்களோ அவர்களும் நிராகரிக்கப்பட வேண்டும். ஹிட்லருக்கு ஒப்பான தலைவர் மோடி. மீண்டும் ஒரு விடுதலை போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக உறுதியுடன் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆகவே திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது நம்முடைய முழு கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: