சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக, அதிமுக, காங்., தேமுதிக, பாமக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தமிழகத்தில் திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், அதிமுகவின் தம்பிதுரை, தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரலில்முடிவடைகிறது. இதேபோல, நாடு முழுவதும் மொத்தம் 10 மாநிலங்களில் 37 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த பிப்.26-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
மனு தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 5-ம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 பேரையும், அதிமுக சார்பில் 2 பேரையும் வேட்பாளர்களாக நிறுத்த முடியும். அந்த வகையில், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக கூட்டணி கட்சிகளான காங். சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி வேட்புமனுத் தாக்கல் செய்தனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக மேலும் 6 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ராஜ்யசபா தேர்தலில் திமுக, அதிமுக, காங்., தேமுதிக, பாமக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர். திமுக, காங்கிரஸ், தேமுதிக, அதிமுக, பாமக, வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர். திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை, அன்புமணி போட்டியின்றி தேர்வாகின்றனர். மாநிலங்களவைத் தேர்தலில் 6 சுயேச்சை வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
