முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாடு முதன்மையானது: ஓபிஎஸ் பேச்சு

தேனி: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பணிகளால் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக விளங்குவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகக் கூட்டம் தேனி பழனிசெட்டிபட்டியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் எம்பி ரவீந்திரநாத், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

5 ஆண்டுகள் தமிழக மக்களுக்கு அரசின் அத்தனை திட்டங்களையும் எடுத்துச் சென்று மக்களின் திருக்கரங்களில் நேரடியாக கிடைக்க செய்த ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆண்டு காலம் ஆற்றிய பணிகளால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இன்றைக்கு பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. இந்த நல்ல சூழலை நாம் பயன்படுத்தி வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 2வது முறையாக மு.க.ஸ்டாலினை முதல்வராக கொண்டு வரவேண்டும். என்னை, என்னோடு கடந்த 3 ஆண்டுகளாக பயணித்தவர்களை தாயுள்ளத்தோடு திமுகவில் இணைத்த மு.க.ஸ்டாலினுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: