சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கழக மகளிரணியினரது வெல்லும் தமிழ்ப் பெண்கள் தேர்தல் பரப்புரையானது தமிழ்நாடு முழுக்க மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் ஸ்டாலினின் மகளிர் படை உறுப்பினர்கள் திராவிட மாடல் அரசின் மகளிர் நலன் சார்ந்த சரித்திர சாதனைகளை விளக்கி பரப்புரை செய்து வருகின்றனர்.
இன்றைய பரப்புரையின் போது திராவிட மாடல் அரசின் மகளிர் நல திட்டங்கள் அனைத்தையும் பட்டியல் போட்டு விளக்கப்பட்டது.
கட்டணமில்லா விடியல் பயணம் திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ. 800 முதல் ரூ. 1,200 வரை சேமித்து வருகின்றனர். இதுவரை ஒவ்வொரு மகளிரும் தோராயமாக ரூ. 60,000 சேமித்துள்ளனர். இதன்மூலம் தினசரி 71.81 மகளிர் பயனடைந்து வருகின்றனர். இதுவரை மொத்தமாக 881 கோடிக்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1.31 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதவரை ரூ. 34,000 வரை இத்திட்டம் மூலம் பயனடையும் ஒவ்வொரு குடும்பமும் பெற்றுள்ளது.
நகரத்தில் தங்கி பணிபுரியும் பெண்களின் நலனுக்காக 19 இடங்களில் அதிநவீன தோழி விடுதிகள் கட்டித்தரப்பட்டுள்ளன. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 6.50 லட்சம் மாணவிகள் ஆண்டுக்கு 12,000 ரூ பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதுவரை மகளிர் உரிமைத் தொகையாக 34,000 ரூ. விடியல் பயணம் திட்டம் மூலம் ரூ60,000 என ஏறத்தால 1 லட்சம் ரூபாயை வழங்கி குடும்பங்களை மேம்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு. இவையின்றி மூன்றாண்டு புதுமைப் பெண் திட்டம் உதவி தொகை ரூ36,000 , தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மூன்றாண்டுக்கு ரூ36,000 என பல்வேறு உதவித் தொகை திட்டங்கள் மூலமும் தமிழ்நாட்டு குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.
இவையின்றி பெண்கள் வாங்கும் 10 லட்சம் வரையிலான சொத்திற்கு 1% கட்டணவிலக்கு அளித்துள்ளது திராவிட மாடல் அரசு. கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.34 லட்சம் கோடி கடனுதவி செய்யப்பட்டுள்ளது. ரூ. 2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசின் பெண்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளால் பெண்கள் வேலைக்கு செல்லும் விகிதம் உயர்ந்து இந்தியளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் சுமார் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நாட்டிலேயே நாம் தான் முதலிடம்.
மேலும் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 14 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு எண்ணற்ற பல சாதனை திட்டங்களை எதிர்கட்சிகளே கண்டு வியந்து அவரவர் மாநிலங்களில் அமல்படுத்தி வருகின்றனர் என்பதெல்லாம் ஒவ்வொரு மகளிரிடமும் பொறுமையாகவும் , எளிமையாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த சரித்திரம் போற்றும் சாதனை நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் அதற்கு மீண்டும் திராவிட மாடல் அரசு தான் அமைய வேண்டும் என பரப்புரை செய்து ஆதரவு திரட்டினர் ஸ்டாலினின் மகளிர் படையினர்.
அனைத்து பெண்களும் மீண்டு முதலமைச்சராக மு. க.ஸ்டாலின் தான் வர வேண்டும் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்து ஆதரவளித்து வருகின்றனர்.
