உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதால் சரணடைய 4 வாரம் அவகாசம் கேட்டு அஸ்வத்தாமன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் சரணடைய மேலும் நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்தாமன் உள்ளிட்ட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், ஹரிகரன் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் மார்ச் 6ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர்கள் சரணடைய வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் சரணடைய நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் , ஹரிகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களது மனுவில், ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் அதற்கு வழக்கறிஞரை நியமித்து அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டியுள்ளதால் சரணடைவதற்கு நான்கு வாரகால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: