சென்னை: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புபொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. போர் பதற்றம்காரணமாக மத்திய கிழக்காசிய நாடுகளில் மார்ச் 5, 6ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகளை சிபிஎஸ்இ ஒத்திவைத்தது. மார்ச் 7ம் தேதி முதல் திட்டமிட்டுள்ள தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மார்ச் 2ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வு போர்ப் பதற்றம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
