ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரத்தில் இருந்து 4 சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகள் அனைத்தும் வழக்கமான விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. விமானங்கள் இயக்கப்படாததால் அரபு நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்கலை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமீரகத்தின் ஃபுஜைராலிருந்து டெல்லி, மும்பை, கொச்சினுக்கு சிறப்பு விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் முடிவு செய்துள்ளது.
