ஆப்கானிஸ்தானில் வெடிமருந்து கிடங்கை அழித்தது பாக். ராணுவம்

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 21ம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த 24ம் தேதி தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லையில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதனால் இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டது. 5வது நாளாக நேற்றும் இந்த மோதல் நீடித்தது.

ஆப்கானிஸ்தானின் எல்லையில் பாகிஸ்தான் படைகள் நேற்றும் தாக்குதல் நடத்தின. இதில் கோஸ்ட் பகுதியில் உள்ள பிட்னா அல் கவாரிஜில் தலிபான்களின் வெடிமருந்து கிடங்கு அழிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் பிடிவி டிவி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

தலிபான் படைகள் தொடர்ந்து பின்வாங்கி வருவதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது. இந்த மோதல் தொடங்கிய உடனேயே கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனால், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடுத்ததால், பாகிஸ்தான்-ஆப்கன் மோதலை எந்த வளைகுடா நாடுகளும் தற்போது கண்டுகொள்ளவில்லை.

Related Stories: