ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரத்தில் இருந்து 4 சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகள் அனைத்தும் வழக்கமான விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. விமானங்கள் இயக்கப்படாததால் அரபு நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கிறது அரசு. அமீரகத்தின் ஃபுஜைராவிலிருந்து டெல்லி, மும்பை, கொச்சினுக்கு சிறப்பு விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளது.
