பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்: 34 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வாவில் பயங்கரவாத எதிர்ப்பு தேடுதல் வேட்டையில் ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது 4 இடங்களில் பயங்கரவாதிகளுடன் நேரடி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 26 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதேபோல நாட்டின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் மேலும் 8 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் கொன்றனர்.

இது தொடர்ச்சியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. இந்த நடவடிக்கைகள், உள்நாட்டு கிளர்ச்சிகளை எதிர்த்து போராடுவதில் ராணுவத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் விளைவாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: