ஒட்டாவா: கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி காலத்தில், காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அதை இந்தியா முற்றிலும் மறுத்தது. மேலும், கனடா, தனது மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டியது. இதன் காரணமாக இருநாடுகளாக தூதரக ரீதியிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கனடாவில் மார்க்கார்னி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, இந்தியா-கனடா இடையே மீண்டும் சுமூகமாக உறவு நீடித்தது. இந்த சூழலில், கனடா பிரதமர் மார்க்கார்னி இன்று இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறார். இந்நிலையில், கனடாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அங்குள்ள பிரபல செய்தி நிறுவனத்திடம் கனடா அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அத்தகைய சம்பவங்கள் இனி தொடராது என்று நம்புவதாகவும், தேசிய பாதுகாப்பு ஆேலா சகர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை உட்பட, இருநாடுகளுக்கு இடையே மிகவும் வலுவான தூதரக தொடர்புகள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவுடனான சுமூகமான உறவை புதுப்பிக்க கனடா விரும்புவது தெரிய வந்துள்ளது.
