×

சட்டீஸ்கர் அரசு அறிவிப்பு பெண்களுக்கு ரூ.1.50 லட்சம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பெண்களுக்கு ரூ.1.50 லட்சம் வழங்கும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. சட்டீஸ்கரில் நேற்று ரூ.1.72 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பி.சவுத்திரி தாக்கல் செய்தார். அப்போது பெண்கள் நலனுக்கான புதிய திட்டத்தை அறிவித்தார்.

ராணி துர்காவதி திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் 18 வயதை எட்டும்போது ரூ.1.5 லட்சம் பெறுவார்கள். அசையா சொத்துக்களை வாங்குவதற்கான பெண்களுக்கு பதிவு கட்டணத்தில் 50 சதவீத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நக்சல் கோட்டைகளாகக் கருதப்பட்ட அபுஜ்மத் மற்றும் ஜாகர்குண்டாவில் இரண்டு கல்வி நகரங்கள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காவல்துறையில் பஸ்தர் பைட்டர்ஸுக்கு 1,500 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பஸ்தரில் இந்திராவதி ஆற்றின் குறுக்கே மட்னார் மற்றும் தேவர்கான் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு பட்ஜெட்டில் ரூ.2,024 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வித் துறைக்கு ரூ.22,360 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : Chhattisgarh government ,Raipur ,Chhattisgarh ,Finance Minister ,O.P. Chaudhary ,Chhattisgarh Assembly ,Rani… ,
× RELATED யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!