பாஜ கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்கு சரிவு, திமுக திட்டங்களால் மனம் மாறிய வாக்காளர்கள் ஆகியவற்றின் காரணமாக ஆதரவு வாக்குகளையாவது காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக. இதனால், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்த டோக்கன்களை கொண்டு வேட்டி, சேலை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர் 28வது வார்டு பகுதியில் நேற்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில், கலந்து கொள்ள வந்த ஆதரவாளர்களுக்கு ரேஷன் கார்டு எண்ணுடன் கூடிய டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின் டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே ஹாட் பாக்ஸ் மற்றும் சில்வர் தட்டு ஆகியவை வழங்கப்பட்டது. அதிமுகவின் இந்த திடீர் தாராள மனப்பான்மை குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அங்கலாய்ப்பு எழுந்துள்ளது.

