பெரம்பூர்: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், கொளத்தூர், ராயபுரம் மற்றும் திருவிக.நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சிதிட்டப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். இன்னும் சில தினங்களில் திறக்கப்பட உள்ள கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் அந்த வளாகத்தில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்திலும் ஆய்வு செய்தார்.
கொளத்தூர் ரெட்டேரி சாலையில் கட்டப்பட்டுவரும் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம், மூலக்கொத்தளத்தில் கட்டப்பட்டுவரும் சமுதாய நலக்கூடம் மற்றும் மேம்படுத்தப்பட்டு வரும் கன்னிகாபுரம் விளையாட்டு திடல், புரசைவாக்கம் நவீன சலவைக்கூடம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், மாநகராட்சி மத்திய வட்டார துண ஆணையர் கௌஷிக் உள்பட பலர் இருந்தனர்.
