சென்னையில் 2வது நாளாக புறநகர் மின்சார ரயில்கள் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி: ரயில்வேத் துறை வேண்டுகோள்

 

சென்னை: சென்னையில் 2வது நாளாக புறநகர் மின்சார ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். எழும்பூர் நடைமேடை சிக்னலுக்காக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம். எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளால் தற்காலிக மாற்றங்களுக்கு ஒத்துழைக்க ரயில்வேத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறைக்​கப்​பட்ட சேவை​கள், புதிய இயக்க முறை காரண​மாக கடற்​கரை- தாம்​பரம் வழித்​தடத்​தில் ரயில் சேவை​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​ட​தால் பயணி​கள் அவதிக்​குள்​ளாகினர். சென்னை – தாம்​பரம் மின்​சார ரயில் வழித்​தடத்​தில் எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் பராமரிப்​புப் பணி​கள் காரண​மாக ஏப்​.5-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவை​கள் குறைக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

வழக்​க​மாக தின​மும் 204 முறை எழும்​பூர் வழி​யாக மின்​சார ரயில்கள் இயக்​கப்​படு​கின்​றன. அதாவது, ஒவ்​வொரு 10-12 நிமிடங்​களுக்கு ஒரு ரயில்கள் இயக்​கப்​பட்டு வந்​தன. இந்​நிலை​யில் பராமரிப்புப் பணி​கள் காரண​மாக எழும்பூரில் வழக்​க​மாக புறநகர் ரயில்கள் நின்று செல்​லும் 10 மற்​றும் 11-வது நடைமேடைக்கு பதிலாக, 5 மற்​றும் 6-வது நடைமேடைகளில் ரயில்கள் நின்று செல்​லும் என்​றும், 204 முறை ரயில்கள் இயக்​கப்​படு​வதற்கு பதில், 164 முறை மட்​டுமே இயக்​கப்​படும் எனவும் அறிவிக்​கப்​பட்​டது.

ரயில் சேவை​கள் குறைக்​கப்​பட்​ட​தால் நேற்று காலை முதல் பயணி​கள் பாதிப்​புக்​குள்​ளாகினர். இதற்​கிடையே சிக்​னல் பிரச்​சினை காரண​மாக நேற்று அதி​காலை​யில் இருந்​தே, கடற்​கரை முதல் தாம்​பரம்வரை இயக்​கப்​பட்ட புறநகர் ரயில்கள் ஆங்​காங்கே நிறுத்​தப்​பட்​டன. ஒரே
தண்​ட​வாளத்​தில் 2 ரயில்கள் எதிரெ​தி​ராக​வும், ஒன்​றன்​பின் ஒன்​றாக​வும் என பல்​வேறு குளறு​படிகளும் ஏற்​பட்​டன. இதன் காரண​மாகபள்​ளி, கல்​லூரி மாணவர்​கள், அலு​வல​கங்​களுக்கு செல்​வோர் கடும் சிரமத்​துக்கு உள்​ளாகினர்.

இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளால் தற்காலிக மாற்றங்களுக்கு ஒத்துழைக்க ரயில்வேத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பயணிகள் வசதி, உட்கட்டமைப்பை மேம்படுத்த எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில் சேவையில் ஏப்.5 வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிக சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும்

 

Related Stories: