“திமுகவை சீண்டிப் பார்த்தால் தமிழ்நாடே பதிலடி தரும், திமுக கூட்டணிக்கு வெற்றிமேல் வெற்றிதான்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை : மதுரை உத்தங்குடியில் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளின் 1.9 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் மூர்த்தி வெள்ளி செங்கோல் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

“வீரம் என்றால் அது மதுரைதான். பாசம் என்றால் அது மதுரைதான். கோயில் என்றால் அது மதுரைதான். சாப்பாடு என்றால் அதுவும் மதுரைதான். இங்கே எல்லாமே FAMOUS தான்.

“உத்தங்குடி முழுவதும் உடன்பிறப்புகள் குடியேறிவிட்டது போல் எனக்கு உள்ளது. சித்திரைத்திருவிழா போல கூடியிருக்கும் உங்களை பார்த்து பூரிப்பு அடைகிறேன்.

” மாநாட்டில் திரண்டுள்ள உங்களை பார்க்கும்போது இனி நாம்தான் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.இனி நாம்தான், இனி எப்போதும் நாம்தான் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

“பாக முகவர்களுக்கான மாபெரும் பயிற்சி, கூட்டங்களை மண்டலவாரியாக நானே சென்று நடத்தினேன்.
ஓரணியில் தமிழ்நாடு எனும் மாபெரும் இயக்கத்தை தொடங்கி 1 கோடி குடும்பங்களை உறுப்பினர்களாக இணைத்துள்ளோம்.

“எஸ்.ஐ.ஆரில் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது வாக்காளர்களை நீக்கவிடாமல் உழைத்த இயக்கம் திமுக.

“தேர்தல் களத்தில் நமது வெற்றியை உறுதி செய்ய உள்ளது 7 லட்சம் பாக முகவர்கள்தான். பிப்.27ல் கோவையில் மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.2 மாதங்களில் மட்டும் திமுக 7 மாநாடுகளை நடத்தியுள்ளது.

“பூத் அளவில் நம்மை போன்று வலிமையாக உள்ள கட்சி இந்திய அளவில் இல்லை. மக்களுக்காக உருவான இயக்கம் திமுக; நமது இயக்கத்தை தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும்.

“திமுகவின் சாதனை, யாராலும் தோற்கடிக்க முடியாத சாதனையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் திமுக கொள்கைகள்தான் எதிரொலிக்கிறது.

“2024 மக்களவை தேர்தலில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வெற்றியை மக்கள் நமக்கு வழங்கினர். திமுக கூட்டணிக்கு வெற்றிமேல் வெற்றிதான்.

“200 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெறுவதே நமது லட்சியம். அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி எனக்கும் சரி No Rest. வாக்குபதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்க கூடாது.

“திமுக அரசின் சாதனை திட்டங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும். மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்திருக்கிறோம்.

“மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை முறியடித்து ரூ.5,000 வழங்கி உள்ளோம். சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

“மார்ச் 1ல் வரும் பிரதமரிடம் மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டத்தை தரவில்லை என்று கேட்கவேண்டும். ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்புத் திட்டங்களும் தரவில்லை என்று பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். கீழடி அகழாய்வு அறிக்கையை ஏன் வெளியிடவில்லை என்று பிரதமரிடம் நீங்கள் கேட்க வேண்டும்,” இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: