காரியாபட்டி அருகே சாலை விரிவாக்க பணி ஆய்வு

 

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இருந்து மல்லாங்கிணர் வழியாக விருதுநகர் வரை செல்லும் சாலையில் தினமும் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சாலையை விரிவுபடுத்த தமிழக அரசு ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இதில் முதல்கட்டமாக சாலையில் இருபுறமும் உள்ள பழைய மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய உயரமான மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சாலை ஓரத்தில் உள்ள கண்மாய், ஊரணி பகுதியில் தடுப்புச்சுவர் மற்றும் தேவையான இடங்களில் சிறிய பாலங்கள் கட்டப்பட்டு, சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

Related Stories: