இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டியை பார்க்க மெரினாவில் சிறப்பு ஏற்பாடு

சென்னை: இருபது அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. உலகம் முழுவதும் இப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் விளையாட முடியாது என முன்பு பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது. பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்டது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி நேற்று இரவு தொடங்கியது எதிர்பார்ப்பின் அளவைக் கூட்டியது.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை சென்னை மெரினா கடற்கரையில் ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . பெரிய எல்இடி திரையில் ஒளிபரப்பான இந்த பரபரப்பு மிகுந்த ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

Related Stories: